×

3 மகன்கள் இருந்தும் உணவுக்கு கஷ்டப்பட்ட வயதான தம்பதி : விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை!

தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை. ஆனால் மனதாலும் உடலாலும் சொல்லமுடியாத துயரை கொடுக்கும் அந்த முடிவை ஒருவர் எடுக்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டும் காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது பலரின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் வயதான தம்பதி உணவிற்கு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் வைகை காலனி பகுதியை சேர்ந்தவர் மச்சக்காளை. இவருக்கு பசுபதி என்ற மனைவியும் 3 மகன்களும்
 

தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை. ஆனால் மனதாலும் உடலாலும் சொல்லமுடியாத துயரை கொடுக்கும் அந்த முடிவை ஒருவர் எடுக்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டும் காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது பலரின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் வயதான தம்பதி உணவிற்கு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் வைகை காலனி பகுதியை சேர்ந்தவர் மச்சக்காளை. இவருக்கு பசுபதி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் அவர்கள் மதுரை, கோவை, சவுதி அரேபியா என சகல போகங்களுடன் வாழ்ந்து வந்துள்ளனர். மதுரையில் வசித்த மகன் கூட இந்த தம்பதிக்கு உணவிற்காக உதவவில்லை என்று கூறப்படுகிறது.

ஆசையாக பெற்று வளர்த்து திருமணம் செய்து வைத்த மகன்களே தங்களை கைவிட்ட நிலையில் விரக்தி அடைந்த இந்த தம்பதி நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் போலீசார் மச்சக்காளை – பசுபதி தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். முதுமை காலகட்டத்தில் மகன்கள் பராமரிக்கவில்லை என தாய் தந்தை தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.