×

காதலித்த பெண்ணை கரம் பிடித்த இளைஞர்… சாதிவெறியில் பெண் வீட்டார் கொடூரச்செயல்!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் குப்பனூர் பகுதியை சேர்ந்த இளம் தம்பதி பகவதி குமார்(24) – ஹரிப்ரியா. பள்ளிப் பருவதிலிருந்தே காதலித்து வந்த இந்த ஜோடி, வெவ்வேறு வகுப்பை வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை. இதையடுத்து, பெற்றோர் சம்மதமின்றி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், திருமணத்தை பதிவு செய்ய தொண்டாமுத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு ஹரி பிரியாவும் பகவதி குமாரும் வந்துள்ளனர். திருமணத்தை பதிவு செய்து
 

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் குப்பனூர் பகுதியை சேர்ந்த இளம் தம்பதி பகவதி குமார்(24) – ஹரிப்ரியா. பள்ளிப் பருவதிலிருந்தே காதலித்து வந்த இந்த ஜோடி, வெவ்வேறு வகுப்பை வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை. இதையடுத்து, பெற்றோர் சம்மதமின்றி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், திருமணத்தை பதிவு செய்ய தொண்டாமுத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு ஹரி பிரியாவும் பகவதி குமாரும் வந்துள்ளனர். திருமணத்தை பதிவு செய்து விட்டு, புகைப்படம் எடுக்க இவர்கள் தயாராகிக் கொண்டிருக்கும் போது திடீரென அங்கு சென்ற பெண் வீட்டார் பகவத் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

ஹரிப்பிரியாவின் தந்தை ராமமூர்த்தி, ஹரிப்பிரியாவை அரிவாளால் அவரை வெட்ட முயன்றுள்ளார். அப்போது அதை தடுக்க முயன்ற பகவதி குமார் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஹரிப்பிரியாவின் சகோதரர் பகவதி குமாரின் முகத்தில் மிளகாய் பொடியை வீசியதால், என்ன செய்வதென்று அறியாது திகைத்து போய் நின்றுள்ளார் பகவதி குமார்.

அச்சமயம் ஹரிப்பிரியாவை அழைத்துக் கொண்டு பெண் வீட்டார் தங்கள் வந்திருந்த காரில் சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பகவதி குமாரிடம் புகார் பெற்ற தொண்டாமுத்தூர் போலீசார், ஹரிப்பிரியாவை மீட்டு மீண்டும் பகவதி குமாருடன் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.