அஞ்சலையம்மாளின் பெயரை கடலூர் ஆட்சியர் வளாகத்திற்கு சூட்ட வேண்டும் - பாமக வலியுறுத்தல்!!
கடலூரில் அரசால் அறிவிக்கப்பட்ட அஞ்சலையம்மாளின் சிலையை திறக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், வயிற்றில் கருவை சுமந்த நிலையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சிறைக்கு சென்ற விடுதலை வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாளின் 133-ஆம் பிறந்தநாளான இன்று, தாயகத்தின் விடுதலைக்காக அவர் நடத்திய போராட்டங்களை நினைவுகூர்வோம். காந்தியால் தென்னாட்டு ஜான்சி ராணி என்று பாராட்டப்பட்ட கடலூர் அஞ்சலை அம்மாளின் பெருமைகளையும், வரலாற்றையும் இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க உழைப்போம்.
அஞ்சலையம்மாளின் தியாகத்தை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த கடலூரில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் வாழ்ந்த சுண்ணாம்புக்காரத் தெரு காந்தியடிகள் பூங்காவில் அமைக்கப்பட்ட சிலை இன்னும் திறக்கப்படவில்லை. அந்த சிலையை உடனடியாகத் திறக்கவும், கடலூரில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தென்னாட்டு ஜான்சிராணி கடலூர் அஞ்சலையம்மாளின் 133-ஆம் பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்; கடலூர் ஆட்சியர் வளாகத்திற்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும்!