×

ஆஸ்கர் வென்றவர்கள் முதல்வருடன் இன்று சந்திப்பு..

 

 The elephant whisperers ஆவணப்படத்திற்காக  சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர்  விருது பெற்றவர்கள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.  இதில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை இந்தியாவின் The elephant whisperers தட்டிச் சென்றது.  இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர்.  யானைகளை பராமரிக்கும் முதுமலையில் உள்ள பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய தம்பதி குறித்த இந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளது.

இந்த ஆவணப்படத்திற்கு விருது கிடைத்தது இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளது.  குட்டி யானை குறித்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் கிடைத்ததை அடுத்து, பலரும் குட்டி யாணைகளைக் காண முதுமலைக்கு குவிந்து வருகின்றனர்.  இந்நிலையில் ‘தி எலிபண்ட் விஸ்பரர்’ குறும்படத்திற்காக ஆஸ்கர் வென்றவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் சந்திக்க உள்ளனர்.