×

திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும்

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்காக திறக்கப்பட்ட சொற்கவாசல் தரிசனத்திற்காக திரண்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆகும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி ஒட்டி கடந்த 30 ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் மூன்று நாட்களுக்கு இன்று வரை ஆன்லைனில் குலுக்கல் மூலம் டிக்கெட் வழங்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நாளை முதல்   8 ம் தேதி வரை ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் என ரூ 300 டிக்கெட் ஆன்லைனில் பக்தர்களுக்கு டிக்கெட்  வழங்கப்பட்டுள்ளது.  கூட்ட நெரிசலை தவீர்க்க  திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படுவது  8 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு திருமலைக்கு நேரடியாக வரும் பக்தர்களை நாளை காலை முதல் இலவச தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட்டு  சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

இதற்காக இன்று மாலை முதலே இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் திரண்டனர். மாலை வந்து  வரிசையில் நின்ற பக்தர்களுக்கு நாளை காலை  சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இன்று இரவு 8 மணி நிலவரப்படி இலவச தரிசனத்திற்கான வரிசை 3 கிலோ மீட்டர் மேலும் நீண்டு நந்தகம் ஓய்வறை வரை பக்தர்கள் காத்திருப்பதால் 24 மணி நேரம் ஆகும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்து வருகின்றனர்.  பக்தர்களுக்கு வரிசைகளிலேயே அவ்வப்போது பால், காபி  அன்னப்பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தங்களுக்கான நேரம் வரும் வரை தேவஸ்தான அதிகாரிகள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.