×

மனைவி இறந்த சோகத்தில் கணவன் மரணம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த தம்பதி சுவாமிநாதன் – சுந்தராம்பாள். இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் மூவருக்குமே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில், இந்த தம்பதி தனது மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். நேற்று காலை திடீரென சுந்தராம்பாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மாலையே அவர் உயிரிழந்துள்ளார். 57 வருடங்கள் சுந்தராம்பாளுடன் இருந்த சுவாமிநாதனுக்கு அவரது மறைவு மிகுந்த வேதனையளித்துள்ளது. மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் சுவாமிநாதன் மனமுடைந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை
 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த தம்பதி சுவாமிநாதன் – சுந்தராம்பாள். இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் மூவருக்குமே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில், இந்த தம்பதி தனது மகன்களுடன் வசித்து வந்துள்ளனர்.

நேற்று காலை திடீரென சுந்தராம்பாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மாலையே அவர் உயிரிழந்துள்ளார். 57 வருடங்கள் சுந்தராம்பாளுடன் இருந்த சுவாமிநாதனுக்கு அவரது மறைவு மிகுந்த வேதனையளித்துள்ளது. மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் சுவாமிநாதன் மனமுடைந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை சுவாமிநாதனும் உயிரிழந்துள்ளார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருமணமானதில் இருந்து ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த இந்த தம்பதி இறப்பிலும் இணை பிரியாது சென்றது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்ற சம்பவம் திருச்சியிலும் இன்று நடந்தது. திருச்சி மாவட்டம் முசிறி தென்கள்ளர் தெருவை சேர்ந்த தம்பதி முத்துவீரன் (80) – ராமாமிர்தம் (78). கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மனமுடைந்த ராமாமிர்தம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். மனைவியின் பிரிவால் மிகுந்த வேதனையில் இருந்த முத்துவீரன், இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்தார்…