ஆபாச பேச்சு.. திருச்சி சூர்யா சிவா கைது..!!
Jun 4, 2026, 11:18 IST
திருச்சி சூர்யா சிவா இன்று (ஜூன்.04) கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பற்றி ஆபாசமாக பேசியதாக பா.ஜ.க. நிர்வாகி அலிசா புகார்.
பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லாவின் பச்சிளம் குழந்தைகளை மையப்படுத்தி ஆபாசமாக பேசியதாக திருச்சி சூர்யா சிவா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், யூடியூபர் முக்தாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி சூர்யா சிவா மற்றும் முக்தார் மீது நடவடிக்கை கோரி பாஜக பிரமுகர் அலிசா நேற்று (ஜூன்.03) கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளித்து, வேண்டுகோள் விடுத்திருந்தார்.