×

ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை 

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளயொட்டி ஓ.பன்னீர்செல்வம் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அவரது பிறந்த நாளையொட்டி அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.  கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
 சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் மற்றும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.