கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம்… மாநகராட்சியிடம் விளக்கம் கேட்ட மனித உரிமை ஆணையம்
கவுதமி வீட்டில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு பதில் கமல்ஹாசனின் இல்லத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டியது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கமல் தரப்பிலிருந்து எங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை, நாங்கள் வெளிநாடு எதுவும் சென்று வரவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் விசாரணையில் நடிகை கவுதமி சமீபகாலத்தில் வெளிநாடு சென்று வந்தார் என்றும். பாஸ்போர்ட் முகவரி அடிப்படையில் கமல் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த போஸ்டர் அகற்றப்பட்டது.
இது குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கமல் வீட்டில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டியது ஏன் என்று நான்கு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.