×

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை நிறைவு!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு உள்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. அதே சமயம் பருவமழை வழக்கத்தை விட அதிகமாகவும், நீடித்ததாலும் கனமழையானது டெல்டா மாவட்டங்களில் பெய்தது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் சேதமாகின. இந்நிலையில் தமிழகம், புதுவை, காரைக்கால், கேரளா, ஆந்திரா மற்றும் தெற்கு உள் கர்நாடகா பகுதிகளிலிருந்து வடகிழக்கு பருவமழை விலகியது என்று
 

தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு உள்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. அதே சமயம் பருவமழை வழக்கத்தை விட அதிகமாகவும், நீடித்ததாலும் கனமழையானது டெல்டா மாவட்டங்களில் பெய்தது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் சேதமாகின.

இந்நிலையில் தமிழகம், புதுவை, காரைக்கால், கேரளா, ஆந்திரா மற்றும் தெற்கு உள் கர்நாடகா பகுதிகளிலிருந்து வடகிழக்கு பருவமழை விலகியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் தேதிகளில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் ” என்று குறிப்பிட்டுள்ளது.