×

வடகிழக்கு பருவமழை: முதல்வர் இன்று ஆலோசனை!

வடகிழக்கு பருவமழைக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார். துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர். அமைச்சர்களுடனான ஆலோசனையில் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். ஏரி குளங்களை தூர் வாருதல், தாழ்வான பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது
 

வடகிழக்கு பருவமழைக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார். துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர். அமைச்சர்களுடனான ஆலோசனையில் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். ஏரி குளங்களை தூர் வாருதல், தாழ்வான பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது பற்றி ஆலோசனை நடைபெற உள்ளது.

பொதுவாக தமிழகத்தை பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை 47 சதவீதம் வரை கிடைக்கும். அத்துடன் கடந்த இந்த காலகட்டத்தில் தான், ஒக்கி, வார்தா, கஜா உள்ளிட்ட புயல்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களை புரட்டி போட்டது. இதை கருத்தில் கொண்டு தான் , தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆயுத்தமாகியுள்ளது.