×

ஈரோட்டில் தனியார் மில் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பலி!

ஈரோடு ஈரோட்டில் தனியார் மில் எந்திரத்தில் சிக்கி படுகாயமடைந்த வடமாநில இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். பீகார் மாநிலம் அரகாபாத் மாவட்டம் ஓபியூர் பகுதியைச் சேர்ந்தவர் உமேந்திர ராஜ்வான்ஷி (27). இவர் ஈரோட்டில் கடந்த 2 வருடங்களாக தங்கி, பவானி மெயின் ரோடு அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உமேந்திர ராஜ்வான்ஷியின் கை எந்திரத்தில் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு
 

ஈரோடு

ஈரோட்டில் தனியார் மில் எந்திரத்தில் சிக்கி படுகாயமடைந்த வடமாநில இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பீகார் மாநிலம் அரகாபாத் மாவட்டம் ஓபியூர் பகுதியைச் சேர்ந்தவர் உமேந்திர ராஜ்வான்ஷி (27). இவர் ஈரோட்டில் கடந்த 2 வருடங்களாக தங்கி, பவானி மெயின் ரோடு அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உமேந்திர ராஜ்வான்ஷியின் கை எந்திரத்தில் சிக்கியது.

இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை, சக தொழிலாளர்கள் மீட்பு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும வழியிலேயே உமேந்திர ராஜ்வான்ஷி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.