×

என்னை யாரும் இயக்க முடியாது – செங்கோட்டையன்..!!

 

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவம்பர் 5) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இருப்பது எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு “பின்னால் இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்”. அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்.. நல்லதே நடக்கும் என்றார்.

இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “நல்லதே நடக்கும்” தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில் 250 பக்கம் இருக்கிறது. அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து இருப்பதை வெளியில் சொல்லக்கூடாது என விதிகள் இருக்கிறது என்றார்.

அதிமுக எந்த மாதிரியான குடும்ப கட்சியாக இருக்கின்றது என்ற கேள்விக்கு, உங்களுக்கு எல்லாம் தெரியும் , மீடியாவில் வந்து கொண்டு தான் இருக்கிறது, அதை நான் சொல்ல தேவையில்லை என்றார்.

.உங்களை பாஜக இயக்குகிறதா என்ற கேள்விக்கு, நான் 53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன்.

என்னை தனிபட்ட முறையில் யாரும் இயக்க முடியாது என தெரிவித்தார்.