×

மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் இல்லை.. தமிழக அரசு தகவல்!

கொரோனா நோய் தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூலை 6 ஆம் தேதிக்கு உள்ளாகவும் மற்ற மாவட்டங்களில் ஜூன் 15 ஆம் தேதிக்கு உள்ளாகவும் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மின்கட்டணம் செலுத்துவதற்கான
 

கொரோனா நோய் தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூலை 6 ஆம் தேதிக்கு உள்ளாகவும் மற்ற மாவட்டங்களில் ஜூன் 15 ஆம் தேதிக்கு உள்ளாகவும் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நீடிக்கக்கோரி வழக்கறிஞர் ராஜசேகர், சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களை தவிர, வேறு எந்த மாவட்டத்திலும் மின்கட்டணம் செலுத்த கால் அவகாசம் நீடிக்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கில் வரும் திங்கள் கிழமை தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.