×

திருமணமான 24 நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை – வீடியோவால் வெளிவந்த உண்மை!

திருமணமான 24 நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு கஸ்தூரிபாய் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரக்ஷனா என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 26ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையுடன் ரக்ஷனா தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில் ரக்ஷனா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார் . அப்போது அவரது மாமியார்
 

திருமணமான 24 நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவேற்காடு கஸ்தூரிபாய் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரக்ஷனா என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 26ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையுடன் ரக்ஷனா தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில் ரக்ஷனா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார் . அப்போது அவரது மாமியார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் ரக்ஷனா கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார. அப்போது ரக்ஷனா வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உடனடியாக இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரக்ஷனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் அவரது செல்போனை கைப்பற்றி விசாரித்ததில், அவர் தனது தந்தைக்கு இறுதியாக வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தனக்கு விருப்பமில்லாத திருமணம் செய்து கொடுத்ததால் தற்கொலை முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

திருமணமான 24 நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ரக்ஷனாவின் தற்கொலை வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரக்ஷனா கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொண்டாரா? அல்லது அவர் வேறு யாரையேனும் காதலித்து வந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.