×

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருப்பதியில் வழிபாடு..!

 

கோலிவுட்டுக்கு வந்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக மாறிய நயன்தாரா மொத்தம் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார். அதனையடுத்து நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். இரண்டு பேரும் சில வருடங்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து ஒருவரையொருவர் புரிந்துகொண்டு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள்.

இந்நிலையில் இன்று நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.தரிசனம் முடித்து திரும்பிய அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேதஆசீர்வாதம், சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கினர்.