×

"என் இல்லமே குறிவைக்கப்பட்டுள்ளது"- காங்கிரஸிலிருந்து வெளியேறிய அமெரிக்கை வி நாராயணன் பரபரப்பு

 

காங்கிரஸிலிருந்து வெளியேறிய அமெரிக்கை வி நாராயணனின் எக்ஸ் தள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் 37 ஆண்டுகளாக இணைந்து பொதுச்சேவையில் ஈடுபட்டு வந்த அமெரிக்கை வி நாராயணன், கடந்த வாரம் கட்சியிலிருந்து விலகினார். 1988ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று, 1986ஆம் ஆண்டு திரு ராஜீவ் காந்தியுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர், திரு ஜி. கே. மூப்பனார் முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார். தமிழ் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில், பங்கேற்று கருத்து தெரிவித்து வந்த அமெரிக்கை நாராயணன் கட்சியிலிருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.