×

செந்தில் பாலாஜி இன்னும் எத்தனை நாட்கள் அமைச்சராக தொடர்வார்? - நாராயணன் திருபதி கேள்வி

 

இன்னும் எத்தனை நாட்கள் தமிழக அமைச்சர் சிறையில் இருப்பார் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது இலாகா இல்லா அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சாதாரண ஜாமீன் மனு தாக்கல் செய்யும் படி அறிவுறுத்தி, வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவ ஜாமின் மனுவை திரும்பப் பெற்று, வழக்கமான ஜாமின் மனு தாக்கல் செய்யப்படும் என செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.