×

“நெல்லையில் எங்கு வேண்டுமானாலும் நான் போட்டியிடுவேன்”- நயினார் நாகேந்திரன்

 

திருநெல்வேலியில் உள்ள தொகுதிகளில் எங்கு வேணாலும் போட்டியிடுவேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். சென்னையில் நாளை NDA தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும். தொகுதி பங்கீடு முடிந்த பின் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதால் பியூஷ் கோயலின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது எங்கள் கூட்டணி டெல்லியோ, பெங்களூரோ எங்கு வேண்டுமானாலும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம். டெல்லி டெல்லினு சொன்னா இங்க கில்லி கில்லினு இவங்களுக்கு நடுக்கம்.. அவ்ளோ பயம். திருநெல்வேலி நாடாளுமன்றத்துக்குபட்ட 6 சட்டமன்ற தொகுதியில் எதில் வேண்டுமானாலும் நான் போட்டியிடுவேன்” என்றார்.