“ஆதவ் அர்ஜுனாவிடம் பணமே இல்லை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்றாங்க”- ஆனந்த்
Sep 20, 2026, 17:02 IST
இன்னும் கொஞ்சம் நாள் தான்...அதுக்கு அப்பறம் திமுக, அதிமுக இருக்காது என அமைச்சர் ஆனந்த் கூறியுள்ளார்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆனந்த், “மாதந்தோறும் ரூ.1,350 கோடி கட்சிப் பணமாகச் சென்று கொண்டிருந்தது. கடந்த நான்கு மாதங்களாக நாங்களும் அதைத் தேடிச் செல்லவில்லை. அந்தப் பணமும் எங்களைத் தேடி வரவில்லை. ஒரு ரூபாயைத் தொட்டால்கூட தலைவர் எங்களைத் தூக்கி எறிந்துவிடுவார். ஆதவ் அர்ஜுனாவிடம் பணமே இல்லை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்றாங்க.தலைவர் CM விஜய் அவர்கள் முகம் எங்க brand. அடுத்த வாரம் வருவார் மதுராந்தகம் சும்மா திருவிழா மாறி இருக்கும்” என்றார்.