×

திருப்பரங்குன்றம் மலைமீது பிரியாணியுடன் சென்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்

 

திருப்பரங்குன்றம் மலை மீது தர்காவிற்கு வழிபாடு செய்ய பிரியாணியுடன் வந்த கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய பக்தர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பழனியாண்டவர் கோவில் வழியாக 700க்கும் மேற்பட்ட பக்தர்களும் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள படிக்கட்டு பாதையில் 240க்கு மேற்பட்டவர்களும். மலைக்கு மேல்  சென்றுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள  தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சர்ச்சை ஏற்பட்டு வந்த நிலையில் போலீசார் மலை முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு கடந்த 3 ஆம்  தேதி முதல் பக்தர்கள் செல்ல அனுமதி தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி சிக்கந்தர் பாஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மலை மீது உள்ள தர்காவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 23ஆம் தேதி முதல் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து நாள்தோறும் கேரளாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மலை மீது உள்ள தர்காவில் வழிபாடு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று மலை மீது உள்ள தர்கா மற்றும் காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர் இன்று கேரளாவை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் தர்காவிற்கு சென்ற நிலையில், கேரளா பாலக்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் மலைக்கு செல்ல பிரியாணியுடன் வருகை தந்துதால் காவல்துறையினர் உணவு மற்றும் அசைவ உணவுகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். ஏற்கனவே கடந்தசில மாதங்களாக மலை மீது செல்வதற்கு பால் தண்ணீர் குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த குழுவினர் மலை மேல் இல்ல சிக்கன் தர்காவிற்கு  பிரியாணியுடன் மலை மேல் ஏற முயன்றனர். அப்போது பழனி ஆண்டவர் கோவில் அருகே போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் சோதனை செய்தபோது வாலிகளில் பிரியாணி கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது அதனை தொடர்ந்து போலீசார் மலை மேல் அசைவ உணவு கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை எனக் கூறியதை தொடர்ந்து அவர்கள் திருப்பி எடுத்துச் சென்றனர் .