×

கண்ணீர் விட்டு கதறி அழுதார் கே.எஸ். அழகிரி

எம்பி வசந்தகுமார் உடலுக்கு கே.எஸ்.அழகிரி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 70. வசந்த்குமார் எம்பி இறப்புக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி வசந்த்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி
 

எம்பி வசந்தகுமார் உடலுக்கு கே.எஸ்.அழகிரி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 70. வசந்த்குமார் எம்பி இறப்புக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி வசந்த்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பூத உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பேழையின் மீது படுத்தவாறு கதறி அழுதார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” வசந்த்குமார் மரணம் மற்றவர்களுக்கு இயல்பாக இருக்கலாம் உலகத்திற்கு இயல்பாக இருக்கலாம் ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இயல்பானதாக இல்லை. வசந்தகுமாரின் மறைவு கடவுள் செய்த தவறு. சொந்த வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் அங்குலம் அங்குலமாக உயர்ந்தவர். பெருந்தலைவர் காமராஜரின் கொள்கையை அவருடைய வாழ்க்கையில் செயலாக்கி வாழ்ந்து வந்தவர் வசந்தகுமார்.ஒன்றை பெற மற்றவர்கள் உழைப்பதை காட்டிலும் அதிக அளவில் உழைப்பவர். காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர் மறைந்துள்ளார். அவரது செயலும் புகழும் ஓங்கும்” என்று கூறினார்.