கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாய் – மகன் கைது
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்த தாய் மற்றும் மகனை போலீசார் கைதுசெய்தனர். உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியில் வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து, விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கந்தசாமிபுரம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சாய்ராபானு (42) என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சாய்ராபானு(42) மற்றும் அவரது மகன் அசேன் முகமது(24) ஆகியோரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து விற்பனை செய்வதற்காக
Nov 4, 2020, 12:55 IST
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்த தாய் மற்றும் மகனை போலீசார் கைதுசெய்தனர். உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியில் வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து, விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கந்தசாமிபுரம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி
சோதனையில் சாய்ராபானு (42) என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சாய்ராபானு(42) மற்றும் அவரது மகன் அசேன் முகமது(24) ஆகியோரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து விற்பனை செய்வதற்காக பதுக்கிவைத்த 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.