×

எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுவிட்டு திரும்பிய இளைஞருக்கு முதல்வர் வாழ்த்து 

 

சென்னை, கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை(27) என்ற இளைஞருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சென்னை கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை (27), மே 19 ஆம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து பாதுகாப்பாக திரும்பியுள்ளார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தை கொண்ட முதல் தமிழன் என்ற பெருமையை ராஜசேகர் பச்சை பிடித்துள்ளார். இந்த செய்தி டிவிட்டரில் வைரலானதை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த இளைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஜசேகர் அலைச்சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளாவில் பல வெற்றிகளை குவித்தனர். தற்போது மலையேற்றத்தில் அசத்திவருகிறார்.