“மத்திய அரசு தமிழ்நாட்டை பழிவாங்குகிறது! தமிழ்நாடு தலைவணங்காது”- மு.க.ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டை பழிவாங்குகிறது மத்திய அரசு, எடப்பாடி பழனிசாமியும் அவரது கட்சியும் டெல்லியுடன் நிற்கிறார்கள், தமிழ்நாட்டுடன் அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
உலக மக்கள் தொகை தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “உலக மக்கள்தொகை தினத்தன்று , மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல்:
- மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது,
- பெண்களுக்கு கண்ணியத்துடன் அதிகாரம் அளிக்கிறது,
- அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குகிறது,
நிலையான வளர்ச்சிக்கான சாம்பியன்கள், ஆனாலும், நமக்கு என்ன ஈடாகக் கிடைக்கிறது? குறைவான இடங்கள். குறைவான நிதி. நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் குரல். ஏன்? ஏனென்றால் தமிழ்நாடு சரியானதைச் செய்தது. அது டெல்லியை அச்சுறுத்துகிறது. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டை பழிவாங்குகிறது மத்திய அரசு. இன்னும் மோசமானது - திரு. பழனிசாமியும் அவரது கட்சியும் தமிழ்நாட்டுடன் அல்ல, டெல்லியுடன் நிற்கிறார்கள். அவர்கள் நமது முன்னேற்றத்திற்காக நம்மைத் தண்டிக்கும் நியாயமற்ற எல்லை நிர்ணயத்தை ஆதரிக்கிறார்கள். ஆனால் நான் தெளிவாகச் சொல்ல வேண்டும்: தமிழ்நாடு தலைவணங்காது. நாம் ஒன்றாக எழுகிறோம் - இது ஓரணி vs டெல்லி அனி. #ஓரணியில்_தமிழ்நாடு சேருங்கள். நமது மண், மொழி, மானம் பாதுகாக்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.