குஜராத் விமான விபத்து அதிர்ச்சி அளிக்கிறது - மு.க.ஸ்டாலின்
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 குழந்தைகள் உட்பட 242 பேர் உடல் கருகி பலியாகின. விமானம் புறப்பட்ட 3 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. 3,000 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமான விபத்துக்குள்ளான பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து இதுவரை சுமார் 50 சடலங்கள் மீட்கப்பட்டன. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 169 பேர் இந்தியர்களாவர். ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது.