‘மக்கள் பவன்’- பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை: மு.க.ஸ்டாலின்
Nov 30, 2025, 16:31 IST
'ராஜ் பவன்' இனி 'லோக் பவன்' என்றழைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில் பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களில் உள்ள ராஜ் பவன்கள் இனி மக்கள் பவன் என்று அழைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2024 ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த, அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது.