×

“QUIT SIR நெருப்புடன் விளையாடாதீர்கள்.. தமிழ்நாடு முழு வீச்சில் போராடும்”- மு.க.ஸ்டாலின்

 

பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கைவிடுமாறு ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பீகாரில் நடைபெறும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மற்றும் ரேஷன் அட்டை ஆகியவற்றை தனித்தனி ஆவணங்களாக ஏற்க மறுத்து பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், மெட்ரிகுலேஷன் சான்றிதழ் உள்ளிட்ட 11 குறிப்பிட்ட ஆவணங்களை மட்டுமே அனுமதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்திலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.