பத்திரிகையாளர்களுக்கு சம்மன் - மு.க.ஸ்டாலின் கண்டனம்
Aug 20, 2025, 11:27 IST
மூத்த பத்திரிக்கையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த்துக்கு அசாம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்த சில நாட்களின் மூத்த பத்திரிக்கையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த்துக்கு அசாம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். FIR நகல் எதுவும் இல்லாமல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இருவரும் கைது செய்யப்படும் அச்சுறுத்தல் உள்ளது.