"உழைப்பவர்களுக்கு அதற்கு ஏற்ற அதிகாரம் கட்சியில் நிச்சயம் கிடைக்கும்"- மு.க.ஸ்டாலின்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுவருகிறார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் திமுக அண்மையில் மதுரையில் நடத்திய பொதுக்குழுவில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற இலக்குடன் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் உத்தரவிட்டுள்ளார். ‘உடன்பிறப்பே வா’என்னும் பெயரில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒன் டூ ஒன் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 13ஆம் தேதி முதல் சந்திப்பு தொடங்கியது.
2026 தேர்தல் பணிகளில் ஒரு பகுதியாக சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளிடம் கட்சிப் பொறுப்புகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், உழைப்பவர்களுக்கு அதற்கு ஏற்ற அதிகாரம் கட்சியில் நிச்சயம் கிடைக்கும். திமுகவின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.