×

அமைச்சரின் மகன் கௌதம சிகாமணி எம்.பியின் வீட்டிலும் அமகாக்கத்துறை சோதனை.. 

 

அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி எம்.பியின் வீட்டிலும் அமகாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமகாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 7 மணி முதல் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின்புறத்தில் உள்ள  ஸ்ரீநகர் காலனி வீடு,  எழும்பூர், பெசன்ட் நகர் மற்றும் விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள வீடு மற்றும்  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவகங்கள் என 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன. அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கௌதம சிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்த வழக்கில் ரூபாய் 8.6 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருந்த நிலையில், தற்போது  சோதனையானது நடைபெற்று வருகிறது.   மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. சோதனை குறித்து தகவலறிந்த தி.மு.க. நிர்வாகிகள் சோதனை நடைபெறும் அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அலுவலகங்கள் முன்பு குவிந்து வருகின்றனர். 11 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கில் தற்போது சோதனை நடத்தப்படுவது திட்டமிட்ட பழிவாங்கும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.