இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை!
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இமானுவேல் சேகரன் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். . வெள்ளையனே வெளியேறு , இரட்டை குவளை முறைக்கு எதிராக மாநாடு,தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்திய இமானுவேல் சேகரன் காமராசர் அழைப்பை ஏற்று காங்கிரசில் இணைந்தவர். இந்நிலையில் பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் ராஜலட்சுமி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் முன்னாள் எம்பி அன்வர்ராஜா, பரமக்குடி
Sep 11, 2020, 10:09 IST
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இமானுவேல் சேகரன் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். . வெள்ளையனே வெளியேறு , இரட்டை குவளை முறைக்கு எதிராக மாநாடு,
தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்திய இமானுவேல் சேகரன் காமராசர் அழைப்பை ஏற்று காங்கிரசில் இணைந்தவர்.
இந்நிலையில் பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் ராஜலட்சுமி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் முன்னாள் எம்பி அன்வர்ராஜா, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் பிரபாகரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் மரியாதை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.