×

ஏரல் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவி!

 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட ஏரல் அருகே பெருங்குளம் பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். 

கனமழை பாதிப்புக்கு உள்ளான தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் அதேசமயம், நிவாரண உதவிகளையும் தங்கு தடையின்றி வழங்கி வருகிறோம். அந்த வகையில், ஸ்ரீ வைகுண்டம் தொகுதி, ஏரல் வட்டத்திற்குட்பட்ட பெருங்குளத்தில் பொது மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், பாய், போர்வை அடங்கிய நிவாரண தொகுப்புகளை இன்று வழங்கினோம். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நிலைமையை சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மக்களிடம் எடுத்துக் கூறினோம்.