×

வளர்ச்சியா? பதவியா? எனக் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார்: அமைச்சர் உதயகுமார் அதிரடி!

வழக்கமாக புதிய புதிய சர்ச்சையை கிளப்பி வரும் அமைச்சர்களுக்கிடையே தற்போது தமிழகத்தின் அடுத்த தலைநகரம் திருச்சியா? மதுரையா? என்ற போட்டி நிலவி வருகிறது. அமைச்சர் உதயகுமாரும், அமைச்சர் செல்லூர் ராஜுவும் தமிழ் வளர்ச்சிக்காக மதுரையை தான் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சியைத் தான் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் இது குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, மதுரையை அடுத்த தலைநகராக்க வேண்டும் என்பது அமைச்சர் உதயகுமாரின் கருத்து
 

வழக்கமாக புதிய புதிய சர்ச்சையை கிளப்பி வரும் அமைச்சர்களுக்கிடையே தற்போது தமிழகத்தின் அடுத்த தலைநகரம் திருச்சியா? மதுரையா? என்ற போட்டி நிலவி வருகிறது. அமைச்சர் உதயகுமாரும், அமைச்சர் செல்லூர் ராஜுவும் தமிழ் வளர்ச்சிக்காக மதுரையை தான் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சியைத் தான் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் இது குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, மதுரையை அடுத்த தலைநகராக்க வேண்டும் என்பது அமைச்சர் உதயகுமாரின் கருத்து தான் என்றும் அரசின் கருத்து இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மதுரையில் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சி தான் முக்கியம் என்பதே என் கருத்து என்றும் பதவியா? வளர்ச்சியா? என முதல்வர், துணை முதல்வர் கேட்டால் பதவியைத் துறக்கத் தயார் என்றும் அதிரடியாக கூறினார்.