×

அரசு பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் இன்று அரசு பள்ளி மாணவர்களுடன் வரிசையில் அமர்ந்து காலை சிற்றுண்டியை சாப்பிட்டார். 

தமிழக அரசு சார்பில், அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினை அமைச்சர் உதயநிதி அவ்வபோது ஆய்வு செய்து வருகிறார். இதற்காக அவர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி குறித்து ஆய்வு செய்தார். அப்போது அங்கு உணவு அருந்தும் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார்.