×

தமிழகம் முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

 

தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆயிரம் காய்ச்சல் தடுப்பு முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சார் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எச்3என்2 காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என மாநில அரசு அறிவித்து இருந்தது. அதன்படி சென்னை சைதாப்பேட்டையில் காய்ச்சல் தடுப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.