×

தெருவில் வசித்த குடும்பத்துக்கு தனது விடுதியை வழங்கிய அமைச்சர் மா.சு

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஐந்து வயது குழந்தை இசக்கியம்மாள் பிளீச்சிங் பவுடரை சர்க்கரை என நினைத்து தெரியாமல் உண்டதால் உடல் மெலிந்து அதிக பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து இன்று காலை நேரில் சென்று குழந்தையின் நலம் விசாரித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். அப்போது அக்குழந்தையின் பெற்றோர்களிடம் விசாரிக்கையில் அவர்கள் அங்கேயே வீதியில் தங்குவதை அறிந்த அடுத்த நொடி சட்டமன்ற விடுதியில் தமக்கு ஒதுக்கிய அந்த அறையை அவர்கள் தங்குவதற்கு வழங்கினார். மேலும் அவர்களுக்கு
 

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஐந்து வயது குழந்தை இசக்கியம்மாள் பிளீச்சிங் பவுடரை சர்க்கரை என நினைத்து தெரியாமல் உண்டதால் உடல் மெலிந்து அதிக பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து இன்று காலை நேரில் சென்று குழந்தையின் நலம் விசாரித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.


அப்போது அக்குழந்தையின் பெற்றோர்களிடம் விசாரிக்கையில் அவர்கள் அங்கேயே வீதியில் தங்குவதை அறிந்த அடுத்த நொடி சட்டமன்ற விடுதியில் தமக்கு ஒதுக்கிய அந்த அறையை அவர்கள் தங்குவதற்கு வழங்கினார். மேலும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிதி உதவியை வழங்கினார். இதனை கண்டு அந்த குழந்தையின் பெற்றோர்கள் மனம் நெகிழ்ந்தனர்.