×

சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்!

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல், சொந்த ஊரான ராஜகிரி கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 12ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, நேற்று இரவு 11 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரி கிராமத்திற்கு ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
 

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல், சொந்த ஊரான ராஜகிரி கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 12ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, நேற்று இரவு 11 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரி கிராமத்திற்கு ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமைச்சரின் உடலுக்கு அவரது உறவினர்கள் கண்ணர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போல அவரது உடலுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், ஏராளமான பொதுமக்கள் திரண்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பின்னர், கொரோனா விதிமுறைகளின் படி அவர் வீட்டின் அருகே உள்ள தென்னை தோட்டத்தில், அரசு மரியாதையுடன் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.