அகில இந்திய மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு… சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார்
அகில இந்திய மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு… சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார்
அகில இந்திய மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க சார்பில் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமைகளின் கீழ் வராது. எனவே இந்த மனுவை நாங்கள் விசாரணைக்கு எடுக்க மாட்டோம். மருத்துவப் படிப்புக்காக அகில இந்தியத் தொகுப்புக்கு தமிழகம் வழங்கும் இடங்களில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கூறியது. இந்த உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.