×

கனிம வளத்துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

 

27 மாவட்டங்களில் இயற்கை வளங்கள் துறை அதிகாரிளை இடமாற்றம் செய்து கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்று செயல்படும் கருங்கல் மற்றும் கல்குவாரிகள் சுமார் 1,845 வரை உள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைத் தவிர்த்து, 2,00க்கும் அதிகமான குவாரிகள் முறையான அனுமதியின்றி செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.  அமைச்சர் பிரபு உத்தரவின் பேரில் சமீபத்தில் நடந்த ஆய்வில் இந்த முறைகேடு கண்டறியப்பட்டது. இவையெல்லாம் அதிகாரிகளுக்கு தெரிந்தே செயல்பட்டு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட 27 மாவட்டங்களில் பணியாற்றிய கனிமளத் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.