×

மருத்துவ படிப்பு ஒ.பி.சி இட ஒதுக்கீடு… இந்த ஆண்டே வழங்க தமிழக அரசு வழக்கு! – மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மருத்துவ மேல்நிலைப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நிலை மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் 50 சதவிகித ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இது தொடர்பாக
 

மருத்துவ மேல்நிலைப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நிலை மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட

மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் 50 சதவிகித ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இது தொடர்பாக ஒரு குழுவை அமைக்க வேண்டும். கால தாமதம் ஆகிவிட்டதால் அடுத்த ஆண்டு முதல் வழங்கலாம் என்று உத்தரவிட்டது.


இந்த ஆண்டே 50 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,

 

இது தொடர்பாக மத்திய அரசு இரண்டு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும், இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.