×

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம்

 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மூன்றரை வயது மகள் அருகில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வந்த நிலையில், மதியம் உணவு இடைவேளையின் போது கை கழுவுவதற்காக வெளியே சென்ற குழந்தைக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது குழந்தை அலறியதால் செங்கல்லை எடுத்து தலையில் தாக்கியதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.