×

பெற்றோரை எதிர்த்து திருமணம்- காதல் ஜோடி போலிசில் தஞ்சம்!

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் காதலித்து திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி பெற்றோர்களுடன் சேர்த்துவைக்க கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகள் அர்ச்சனா(21). இவர் வாணியம்பாடி அடுத்த ஜனதபுரம் பகுதியில் உள்ள பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி அருகே உள்ள கல்லூரிக்கு வந்து சென்ற போது கோணாமேடு பகுதியை சேர்ந்த அரவிந்தன்(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள்
 

திருப்பத்தூர்:

வாணியம்பாடியில் காதலித்து திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி பெற்றோர்களுடன் சேர்த்துவைக்க கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகள் அர்ச்சனா(21). இவர் வாணியம்பாடி அடுத்த ஜனதபுரம் பகுதியில் உள்ள பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி அருகே உள்ள கல்லூரிக்கு வந்து சென்ற போது கோணாமேடு பகுதியை சேர்ந்த அரவிந்தன்(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் நண்பர்களாக பழகி பின்னர் ஒரு வருட காலமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அர்ச்சனாவின் வீட்டில் அவரது பெற்றோர் அர்ச்சனாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்த அர்ச்சனா அரவிந்தன் இருவரும் தங்களது வீட்டுக்கு தெரியாமல் கடந்த 17ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களின் உதவியுடன் ஆலங்காயம் அடுத்த தீர்த்தம் பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இருவரும் சென்னையில் நண்பரின் வீட்டில் தங்கியுள்ளனர்.

இருவரும் பெற்றோர்கள் தேடுவதை அறிந்து அவர்களை அழைத்து சமாதானம் செய்தும், அவர்கள் சம்மதத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு இருவரும் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து நகர போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.