சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை!
புதுக்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞருக்கு மகளிர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை கடந்த 2019ஆம் ஆண்டு வட மாநிலத்தை சேர்ந்தடேனிஸ் பட்டேல் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார் . இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனிஸ் பட்டேலை கைது செய்தனர் . இதற்கான வழக்கு புதுக்கோட்டை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து
Feb 18, 2021, 14:54 IST
புதுக்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞருக்கு மகளிர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை கடந்த 2019ஆம் ஆண்டு வட மாநிலத்தை சேர்ந்தடேனிஸ் பட்டேல் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார் . இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனிஸ் பட்டேலை கைது செய்தனர் . இதற்கான வழக்கு புதுக்கோட்டை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் இன்று நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளியான டேனிஸ் பட்டேலுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.