ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த நபர் குற்றவாளி என தீர்ப்பு
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய ஹேமராஜை குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்.
கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். வேலூர் அருகே ரயில் சென்றுகொண்டிருந்த போது அந்த ரயிலில் பயணம் செய்த மர்ம நபர் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில், இதனால் தான் மாட்டிக்கொள்வோம் என பயந்த மர்ம நபர் கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கை, காலில் எழும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஹேமராஜ் என்பவர் கைது கைது செய்யப்பட்டார். கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து சிசுவை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
இந்நிலையில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய ஹேமராஜை குற்றவாளி என அறிவித்தது திருப்பத்தூர் நீதிமன்றம். தண்டனை விவரங்கள் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.