×

‘சவுதியில் இருந்து திரும்பிய கணவன்’ மனைவி செய்த செயலால் மனம் நொந்து தற்கொலை!

தேனி அருகே வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபர், மனைவி தன்னடன் வராததால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை, கேகே குளம் பகுதியில் வசித்து வந்தவர் கோபிநாத். இவர் சவுதியில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் தனது தாய்மாமமன் மகள் ஜெயப்ரியாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணம் நடந்து சில மாதங்களில், அவர் மீண்டும் வெளிநாட்டுக்கு சென்றதால், ஜெயப்ரியா அவர் மீது கோபத்தில்
 

தேனி அருகே வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபர், மனைவி தன்னடன் வராததால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூரை, கேகே குளம் பகுதியில் வசித்து வந்தவர் கோபிநாத். இவர் சவுதியில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் தனது தாய்மாமமன் மகள் ஜெயப்ரியாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணம் நடந்து சில மாதங்களில், அவர் மீண்டும் வெளிநாட்டுக்கு சென்றதால், ஜெயப்ரியா அவர் மீது கோபத்தில் இருந்துள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை வீட்டுக்கு வந்த கோபிநாத், தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்திருக்கிறார். தனது அம்மா வீட்டில் இருந்து கொண்டு கோபிநாத் உடன் செல்ல மறுத்த கோபிநாத், அவருடன் பேசக்கூட மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ஜெயப்ரியாவின் குடும்பத்தினர் அவரை கடுமையாக திட்டியுள்ளனர். அதனால் மனமுடைந்த கோபிநாத், அன்று இரவே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், தனது குடும்பத்தை காப்பாற்ற தான் வெளிநாட்டுக்கு சென்றதாகவும் ஜெயப்பிரியாவின் உறவினர்களால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களை கைது செய்த பிறகு தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கோபிநாத் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.