×

ஆபாச படங்களை இணையத்தில் டவுன்லோடு செய்து ஷேர் செய்த நபர் கைது!

ஆபாச படங்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதை பகிர்ந்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது ஆபாச இணையதளம். இதனால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்பவர்களை தனிப்படையினர் அவர்களின் ஐ.பி எண்ணை வைத்து பிடித்து வருகின்றனர். இந்நிலையில் ஆபாச வீடியோ, படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து, பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர போலீசார் தனிப்பிரிவை
 

ஆபாச படங்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதை பகிர்ந்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது ஆபாச இணையதளம். இதனால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்பவர்களை தனிப்படையினர் அவர்களின் ஐ.பி எண்ணை வைத்து பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆபாச வீடியோ, படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து, பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர போலீசார் தனிப்பிரிவை தொடங்கியுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு மேல் இணையத்திலிருந்து ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, பகிர்ந்த திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த வகதீஸ் (32) என்பவரை பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவருக்கு உதவியாக இருந்த மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.