×

மெரினாவில் நண்பரின் கண்களை தோண்டி எடுத்தவர் கைது!

மதுபோதையில் நண்பரின் கண்களை தோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் நண்பர்கள் அசோக சக்கரவர்த்தி – பெரிய பாண்டியன் இருவரும் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது மது போதையில் இருந்த அசோக சக்கரவர்த்தி, பெரிய பாண்டியனின் தாயை குறித்து தவறாக பேசியுள்ளார். இதனால் நண்பர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தகராறு முற்றவே, அசோக சக்கரவர்த்தியின் 2 கண்களையும் பெரிய பாண்டியன் நோண்டி எடுத்துவிட்டார்.
 

மதுபோதையில் நண்பரின் கண்களை தோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் நண்பர்கள் அசோக சக்கரவர்த்தி – பெரிய பாண்டியன் இருவரும் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது மது போதையில் இருந்த அசோக சக்கரவர்த்தி, பெரிய பாண்டியனின் தாயை குறித்து தவறாக பேசியுள்ளார். இதனால் நண்பர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தகராறு முற்றவே, அசோக சக்கரவர்த்தியின் 2 கண்களையும் பெரிய பாண்டியன் நோண்டி எடுத்துவிட்டார்.

இதனால் வலி பொறுக்க முடியாமல் அசோக சக்கரவர்த்தி துடிதுடித்து கொண்டிருந்துள்ளார். இதை தொடர்ந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்தவற்றை பெரியபாண்டியன் கூறியதையடுத்து , சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பெரிய பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த அசோக பாண்டியனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.