மக்கள் நீதி மய்ய நிர்வாகி மரணம்- கமல்ஹாசன் இரங்கல்
Mar 3, 2023, 07:40 IST
மக்கள் நீதி மய்யத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் முஸ்டாக் அலி (எ) ஆவடி பாபு திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “மக்கள் பணியில் மிகுந்த ஆர்வமுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட களப்பணியாளரை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.