×

சிறையில் தந்தை,மகன் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படும் – நீதிபதிகள் கருத்து

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்திருக்கின்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது. இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று அவர்களது உடல்களின் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், அந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் உடல்களை
 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்திருக்கின்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது. இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

நேற்று அவர்களது உடல்களின் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், அந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் உடல்களை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே உயிரிழந்த ஜெயராஜின் மனைவி உடல்நலம் சரியில்லாமல் போனதால் அவரது மகள் இருவரின் உடல்களையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் நேற்று மாலை அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரிக்கும் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி எஸ்.பி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் பேசிய நீதிபதிகள், தந்தை மகன் உயிரிழப்புக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் நீதிமன்றத்தைக் குறைவாக மதிப்பிட வேண்டாம் என்றும் இச்சம்பவம் தொடர்பாக பல வதந்திகள் பரவி வருவதாகவும் கூறினர்.

மேலும், கோவில்பட்டி கிளைச்சிறையின் பதிவேடுகள் மற்றும் மருத்துவ பதிவேடுகளின் புகைப்படத்தை எடுத்து வைக்க வேண்டும் என்றும் அதன் சிசிடிவி காட்சிகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூன் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.